அமித் ஷாவின் மிரட்டும் அறிவிப்பைத் தொடர்ந்து வலுக்கும் போராட்டம்!

லக்னோ (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப் பெற்றுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “எக்காரணம் கொண்டும் குடியுரிமை சட்டம் திரும்பப் பெற மாட்டாது”…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு!

புதுடெல்லி (21 ஜன 2020): ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும். மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்...

உத்திர பிரதேசத்தில் போலீசார் அட்டூழியம் – போராட்டக்காரர்கள் மீது சித்ரவதை – வீடியோ!

லக்னோ (19 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் போலீசர் போராட்டக்காரர்கள் மீது அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத்…

மேலும்...

பல லட்சம் மக்கள் பங்கேற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

மங்களூரு (17 ஜன 2020): மங்களூரில் பல லட்சம் மக்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள அடயார் கன்னூர் மைதானத்தில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக்க்கில்…

மேலும்...

டெல்லி ஜும்மா மசூதியில் மீண்டும் போராட்டத்தில் குதித்த சந்திரசேகர் ஆசாத்!

புதுடெல்லி (17 ஜன 2020): டெல்லி ஜும்மா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளார். ஜாமீனில் வெளியாகியுள்ள சந்திரசேகர் ஆசாத், இன்றிரவு 9 மணிக்குள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக கடந்த டிசம்பர் 21-ம்தேதி டெல்லி ஜாமா மசூதியில் சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன்…

மேலும்...

முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்ததால் துன்புறுத்தப்பட்டேன் – சமூக ஆர்வலர் ராபின் வர்மா!

லக்னோ (16 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ராபின் வர்மா சிறையில் பட்ட சித்ரவதைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், உத்திர பிரதேசம் லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் கைதானவர்களில் அடங்குவார்.. தற்போது வெளியாகியுள்ள அவர் போலீசார் பலர் தன்னை கடுமையாக…

மேலும்...

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)

மும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் ‘No CAA-NRC-NPR’ என்ற வாசகங்களுடன் டீ சர்ட் அணிந்து இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் இதனை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது. ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் “இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பில்லை” என்று சொல்லியது; காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பதிலிருந்து, தி.மு.க. விலகிச் செல்வதைக் காண முடிகிறது. தந்தைப் பெரியாரோடு களம் கண்டு, தனது சமூகநீதிச் செயல்பாடுகளால் சமத்துவப்…

மேலும்...