இந்தியாவில் இரண்டு கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்!

ரியாத் (04 டிச 2021): இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. சவூதியில் தடுப்பூசியைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் இப்போது பெற்றுக் கொள்ளலாம். இதற்கு செஹாத்தி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியாவிலிருந்து இரண்டு டோஸ் கோவ்ஷீல்டுகளைப் பெற்று தடுப்பூசி சான்றிதழுக்காக சவுதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் செஹாத்தி செயலி…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – லாக்டவுன் உண்டாகுமா? -சவூதி அரேபியா விளக்கம்

ரியாத் (03 டிச 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருந்தபோதும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுக்காது என்று அந்நாட்டு சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி  போட்டு முடித்துள்ளனர், எனவே கவலைப்பட எதுவும் இல்லை என சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஃபைஸர் நிறுவனம் சொல்வது என்ன?

நியூயார்க் (01 டிச 2021): தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப்…

மேலும்...

சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

சென்னை (28 நவ 2021): கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் இடம்பெறவில்லை. 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு…

மேலும்...

மீண்டும் ஊரடங்கு – முதல்வர் உத்தரவு!

மும்பை (28 நவ 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவக்கூடியது என்பது பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கொரோனா ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே ஒமிக்ரான் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய…

மேலும்...

குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

கொரோனா புதிய வைரஸ தற்போதைய தடுப்பூசிகள் தடுக்குமா?

ஜெனீவா (28 நவ 2021): தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24-ந் தேதி கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ள பெயர்தான் இது. இந்த பெயர், கிரேக்க எழுத்துகளின் 15-வது எழுத்து என்கிறார்கள். இந்த வைரஸ் தொடர்பாக நேற்று முன்தினம் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு அவசரமாக கூடி விவாதித்தது. அதில், இந்த உருமாறிய வைரசை உலக சுகாதார அமைப்பு வி.ஓ.சி. அதாவது, கவலைக்குரிய பிறழ்வு என்று வகைப்படுத்தி…

மேலும்...