ஊரடங்கில் மது போதையில் அதிமுக பிரமுகர் – வெளுத்து வாங்கிய பெண் போலீஸ் (வீடியோ)

கள்ளக்குறிச்சி (23 ஏப் 2020): ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருக்க, மது போதையில் பெண் போலீசிடம் தன் திமிரைக் காட்டிய அதிமுக பிரமுகர் மீது எதற்கும் அச்சப்படாமல் ஆக்‌ஷன் எடுத்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்த நிலையில் நாடெங்கிலும் மது கடைகள் மூடப்பட்டிருக்க, மது அருந்திவிட்டு…

மேலும்...

ஹலோ சோனு நிகாம் துபாயில் பாங்கோசை கேட்குதா? – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

துபாய் (22 ஏப் 2020): இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்வாவினரின் செயல்பாடுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. 2014ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், படுகொலைகள் என எல்லாம், தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கொரோனாவை மறந்து பலரும் இதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். போதாதற்கு இந்துத்வா ஆதரவு சினிமா கலைஞர்கள், தலைவர்கள் முதல் சாதாரண இந்துத்வா பதிவாளர்கள் வரையிலான ட்விட்டர் பதிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனத்திற்கு…

மேலும்...

எல்லாரும் நிறுத்திட்டாங்க அதனால நாங்களும் நிறுத்திட்டோம் – சுகாதாரத்துறை விளக்கம்!

சென்னை (22 ஏப் 2020): சரியான ரிசல்ட் தராததால் தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் முறை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த பரிசோதனையின் முடிவில் இருப்பவருக்கு PCR சோதனை…

மேலும்...

நான் தலைமறைவாக இருந்தேனா? – மனம் திறந்த தப்லீக் ஜமாத் தலைமை இமாம்!

புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா ரேபிட் கிட் சோதனை முறை நிறுத்தம்!

புதுடெல்லி (22 ஏப் 2020):சோதனை முடிவுகள் துல்லியமான முடிவுகளை தராததால், 2 நாட்களுக்கு சோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால்,…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று ஒரே நாளில் 178 பேர் வீடு திரும்பல்!

சென்னை (21 ஏப் 2020): தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். அங்கு கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட 124 நபர்களில் 71 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர்…

மேலும்...

சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால்…

மேலும்...

எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் முஸ்லிம்களுக்கு திடீர் பாராட்டு!

சென்னை (21 ஏப் 2020): பிற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க தங்களது தங்களது பிளாஸ்மாவை வழங்க முன் வந்துள்ள தப்லீக் ஜமாத்தினருக்கு எஸ்வி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக வை சேர்ந்த எஸ்வி சேகர் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி பதிவிட்டு வருவார். ஒட்டு மொத்த இந்துத்வா கொள்கையினரும் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்பி வந்தனர். இது இப்படியிருக்க திடீர் திருப்பமாக முஸ்லிம்களை பாஜகவினர்…

மேலும்...

ரேப்பிட் கிட்டில் தவறான முடிவுகள் – கொரோனா சோதனையை நிறுத்தி வைத்தது ராஜஸ்தான் அரசு!

ஜெய்ப்பூர் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் சோதனை முறையான ரேப்பிட் கிட்ஸில் எடுக்கப்படும் முடிவுகள் தவறானவையாக உள்ளதால் இந்த முறையை நிறுத்தி வைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட்…

மேலும்...

ஜனாதிபதி மாளிகையில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

புதுடெல்லி (21ஏப் 2020): இந்திய ஜனாதிபதி தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு பெண் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளில் வசிக்கும் மொத்தம் 11 பேர், அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன், வீட்டு தனிமைப்படுத்தலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் ராஷ்டிரபதி பவனிலேயே பணிபுரியும் கீழ்-செயலாளர் மட்டத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியின்…

மேலும்...