டெல்லி தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மையா? – அமித்ஷா வேறு வகை பதில்!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு பாஜக நாடாளுமன்ற., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்….

மேலும்...

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த கட்சி ஆம் ஆத்மி!

புதுடெல்லி (09 பிப் 2020): நேற்று நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கே முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53…

மேலும்...

மாநிலங்களவையை கிடுகிடுக்க வைத்த விப்லவ் தாக்கூர்!

புதுடெல்லி (08 பிப் 2020): விப்லவ் தாக்கூர் இவர்தான் இன்று இணையஙகளை கலக்கிக் கொண்டிருப்பவர். 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 1985 முதல் இமாச்சல் மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை இவர் வகித்து வந்திருக்கிறார். இவர் மாநிலங்களவை பேசிய அனல் கக்கும்…

மேலும்...

டெல்லியில் பாஜகவுக்கு பலத்த அடி – கருத்துக் கணிப்பு தகவல்

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 – 57 வரையிலும், பாஜகவுக்கு 11 – 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும்…

மேலும்...

காந்தியா? கோட்சேவா? – மோடிக்கு காங்கிரஸ் கிடுக்கிப்பிடி!

பிரதமர் மோடியின் ஆதரவு மகாத்மா காந்திக்கா?, நாதுராம் கோட்சேவுக்கா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது: மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசி உள்ளார் இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன? மேலும் மகாத்மா காநதியை தொடர்ந்து அவமதித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது மோடி எந்த நடவடிக்கையும் இது வரை…

மேலும்...

சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 பிப் 2020): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோனியா காந்தி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

ஒன்றும் புரியவில்லை – பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங் கருத்து!

புதுடெல்லி (02 பிப் 2020): நீண்ட நேரம் பட்ஜெட் வாசித்ததால் ஒன்றும் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனால் சமர்ப்பிக்கப் பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெக நேரம் தேவைப்படுகிறது என்றார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட் வெற்று…

மேலும்...

மோடிக்கு மதிப்பு மிக்க பரிசு வழங்கிய காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி (27 ஜன 2020): பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பரிசாக வழங்க ஆர்டர் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக கூறி எதிர் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்துள்ளது. அத்துடன், “குடியுரிமை…

மேலும்...

வெளியில் சொல்லாதீர்கள் – ஸ்டாலின் கண்டிப்பு!

சென்னை (18 ஜன 2020): கூட்டணி கட்சிக்குள் உள்ள விவகாரங்களை பொதுவில் சொல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு கட்சியினரும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பின்பு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-…

மேலும்...

சோனியா காந்தி வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

புதுடெல்லி (18 ஜன 2020): டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று சோனியா காந்தியின் வீட்டு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறாவுள்ள டெல்லி சட்டப்பேரவஇ தேர்தலில் கராவல் நகர் மற்றும் படேல் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங், ஹர்மன் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...