மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி – பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு உறுதி!

புதுடெல்லி (29 ஜன 2020): நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது சரியே எனவும் உத்தரவிட்டனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி…

மேலும்...

நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம் – தள்ளிப் போகுமா தூக்குத் தண்டனை?

புதுடெல்லி (28 ஜன 2020): நிர்பயா வழக்கின் திடீர் திருப்பமாக சிறையில் தூக்குத் தண்டனை குற்றவாளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புதிய மனு நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

மேலும்...

2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை எரித்துக் கொன்றவர்களுக்கு ஜாமீன்!

புதுடெல்லி (28 ஜன 2020): 2002 குஜராத் வன்முறையில் முஸ்லிம்களை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2002 குஜராத் கலவரத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில், சர்தார்பூராவில் 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டதும் அடங்கும். அந்த வழக்கு தனியாக நடைபெற்று வந்தது. இதில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு…

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...

தூக்குத் தண்டனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு மனு!

புதுடெல்லி (22 ஜன 2020): தூக்குத் தண்டனைகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டும் குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போகிறது. இதனால் நாட்டில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், தூக்குத் தண்டனை விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. முக்கிய வழக்குகளில்…

மேலும்...

BREAKING NEWS: குடியுரிமை சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்க்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 143 மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போட்கே தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு தடை விதிக்க…

மேலும்...

நாடே எதிர் பார்க்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இச்சட்டத்தை எதிர்த்து முதலில் வழக்கு தொடர்ந்தது அதனை தொடர்ந்து இதுவரை 143 வழக்குகள் உச்ச…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – அதிரடி காட்டிய பஞ்சாப் அரசு!

சண்டீகர் (17 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!

திருவனந்தபுரம் (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மாநில அரசுகளில் கேரள அரசு முதன்மை வகிக்கிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த…

மேலும்...