ரஜினி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சென்னை (17 அக் 2020): ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி குறித்த வழக்கை திரும்ப பெறுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு…

மேலும்...

திமுக எம்பியின் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கம்!

சென்னை (17 அக் 2020): திமுக எம்பி கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கவுதமசிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

தமிழனாக பிறந்தது குற்றமா? – முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: ‘இதுநாள்‌ வரை என்‌ வாழ்க்கையில்‌ பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன்‌. அது விளையாட்டானாலும்‌ சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும்‌ சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச்‌ சுற்றி பல்வேறு சர்ச்சைகள்‌, விவாதங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌ அதற்கான…

மேலும்...

பாஜகவினரை எதிர்ப்பேன் – குஷ்பு அதிரடி!

சென்னை (16 அக் 2020): பெரியாரை விமர்சிக்கும் பாஜகவினரை கட்டயமாக கண்டிப்பேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியாரை இன்றும் மதிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பெரியாரை பாஜகவினர் யாரும் விமர்சித்தால் அதனை கண்டிக்கும்…

மேலும்...

வெடிக்கும் பூகம்பம் – திமுக விசிக இடையே விரிசல்?

சென்னை (16 அக் 2020): தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் வேலைகள் நடைபெறுகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் தற்போது யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியாத வகையில் கட்சித் தலைவர்கள் குழப்பி வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் தேர்தல்…

மேலும்...

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...

நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்!

மதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை…

மேலும்...

சாதி வெறியின் ருத்ரதாண்டவம் – தலித் உடலை எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு!

தென்காசி (15 அக் 2020):  மரணித்த தலித் உடலை  எடுத்துச்செல்ல ஒருகுறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோயில் பகுதியில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆதிக்க சாதியினர் என இரு பிரிவினரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒருவர் நேற்று இறந்துள்ளார். இவரது சடலத்தை சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால்  இப் பகுதியின் வழியாகவே செல்ல வேண்டும். இந்நிலையில், இந்தப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்று சாதி இந்துக்கள் பிரச்சினை செய்துள்ளனர். ஏறக்குறைய…

மேலும்...

கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சருடன் திடீர் சந்திப்பு!

புது டெல்லி (14 அக் 2020): டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி மன்சூக் மாண்டவியாவை தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கனிமொழி எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். துறைமுகத்துக்கு சொந்தமான நிலங்களில் காற்றாலை, உணவு தானியங்களுக்கான கிடங்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். துறைமுகம்…

மேலும்...

திருச்சி மசூதி இடிப்பிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (13 அக் 2020): திருச்சி திருச்சி திருவானைகோவில் மசூதி இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைகோவிலில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்றதடை ஆணைகளைப் பெற்றிருந்த…

மேலும்...