திருச்சியில் பரபரப்பு – கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை வீசி எறிந்த மருத்துவ ஊழியர்கள்!

திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை வேனில் ஏற்றிசென்று கோட்டைமேடு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 433 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 228 பேருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி சமயபுரத்தை…

மேலும்...

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை (25 ஜூன் 2020): திமுக எம்பி கனிமொழி வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்ற் நிலையில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும், தூத்துக்குடி திமுக எம்.பி-யுமான கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு தலைமை காவலர் மற்றும் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக தமிழக காவல்துறை திரும்ப பெற்றது. திமுக எம்.பி கனிமொழிக்கு…

மேலும்...

மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்கள் செல்ல இ.பாஸ் அவசியம் – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு…

மேலும்...

லாக்கப் – விசாரணைக் கைதிகளின் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி – நீதிபதிகள் ஆதங்கம்!

மதுரை (24 ஜூன் 2020): சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் தொடர்பான விசாரணையில் லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்…

மேலும்...

முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை…

மேலும்...

மதுரையிலும் பொதுமுடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

மதுரை (22 ஜூன் 2020): மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ…

மேலும்...

நான் உயிரோடு இருக்கும் வரை சங்கருக்கு நீதி வாங்காமல் விடமாட்டேன்: கவுசல்யா!

சென்னை (22 ஜூன் 2020): உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. உடுமலை சங்கர், கெளசல்யா இருவரும் வெவ்வேறு ஜாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். இந்த…

மேலும்...

கூடு விட்டு கூடு பாயும் கொரோனா – சென்னையிலிருந்து வெளியேறியவர்களால் விபரீதம்!

சென்னை (22 ஜூன் 2020): சென்னையை விட்டு பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதால் தமிழகமெங்கும் கொரோனா அதிரடியாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜுன் 19ஆம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். இபாஸ் வாங்கியும் இ பாஸ் இல்லாமலும்…

மேலும்...

உண்மை வெளியே வரும் வரை கேள்வி கேட்போம் – கமல்ஹாசன் அதிரடி!

சென்னை (21 ஜூன் 2020): மத்திய அரசிடமிருந்து உண்மை வெளியே வரும்வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்லை விவகாரம் குறித்து கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ” எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை…

மேலும்...

தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (21 ஜூன் 2020): தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 09.06.2020 அன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், “கொரோனா…

மேலும்...