விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர். இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்….

மேலும்...

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!

சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா 18 ஆண்டுகாலம் வாழ்ந்து தற்போது பிரிந்து வாழவுள்ளதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2…

மேலும்...

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனுஷ் சில பொருள்களை எடுத்துச்…

மேலும்...

நடிகர் தனுஷ் ரஜினி மகள் ஐஸ்வர்யா விவாகரத்து – பரபரப்பு பின்னணி!

சென்னை (18 ஜன 2022): நடிகர் தனுஷ் மற்றும் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாக, இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்கிற பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே விருப்பம் இல்லாமல் தான்…

மேலும்...

ஒடிடியில் மாநாடு திரைப்படம்!

சென்னை (18 டிச 2021): மாநாடு திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் வெளியீட்டுத் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும்…

மேலும்...

நடிகர் விக்ரமுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (16 டிச 2021): நடிகர் விக்ரமுக்குஜ் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து உடல்நலம் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் சமீபத்தில் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

எனக்கு கொரோனா தொற்றியது எப்படி? – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

சென்னை (13 டிச 2021): தனக்கு கொரோனா எப்படி தொற்றியது? என்பது குறித்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “இங்கு பேசியவர்கள் ஆழ்வார்பேட்டையை பேருந்தில் கடக்கும்போதெல்லாம் என்னை நினைத்து கொள்வதாக கூறினர். நான், சிவாஜிகனேசன் உட்பட பலரும் எங்களது காலத்தில் வாழ்ந்த உயர்ந்த நட்சத்திரங்களை இதுபோல வியந்து பார்த்தவர்கள்தான். சினிமா ரசனை என்பது, மனதுக்குள் நெருப்பு போல பற்றிக் கொள்வது. ஆர்வம், திறமை இல்லாமல் சினிமாவில் யாராலும்…

மேலும்...

பெண்களின் பெற்றோருக்கு எதிராக பேசிய கமல் ஹாசன் – கொந்தளித்த ராஜேஸ்வரி பிரியா!

சென்னை (12 டிச 2021): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலாச்சார சீரழிவை மீண்டும் அரங்கேற்றியுள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தைச் சீரழிப்பதாக முன்னதாகவே பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சிதான் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளதாவது, ”பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

மேலும்...

நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு படத்தின் கதைக்கு நகைச்சுவையான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் குழுவும், வடிவேலும் ஈடுபட்டு வந்தனர்.மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருவதால், இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று…

மேலும்...

கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக…

மேலும்...