கோதாவரி (15 டிச 2021): ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்ததாகவும், மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மீட்புப்படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், மாநில பேரிடர் மீட்புப்படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது