தர்பார் இசை – அனிருத்துக்கு எதிராக கொந்தளித்த இசை கலைஞர்கள்!

Share this News:

சென்னை (05 ஜன 2020): இசையமைப்பாளர் அனிருத் தமிழக இசைக் கலைஞர்களைப் புறக்கணித்ததாக புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தீனா தெரிவிக்கையில், “ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்தில் தமிழக இசைக்கலைஞர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. ஏற்கனவே முந்தைய படத்தில் அவரிடம் கேட்டிருந்தோம், அவர் அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை!” என்றார்.

மேலும் பேசுகையில், “நாங்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளோம், தர்பார் போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்தால் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதை விடுத்து வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இதனை ரஜினி அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ” என்றார்.

மேலும் தர்பார் பட இசை ஏற்கனவே வந்த இசையின் காப்பி என்ற சர்ச்சையும் உள்ளதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து பேச தீனா மறுத்துவிட்டார்.


Share this News:

Leave a Reply