கொரோனாவிலும் மருந்தில் தலைவிரித்தாடிய கொள்ளை!

Share this News:

ஐதராபாத் (14 ஜூலை 2020): அனுமதியின்றி கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா சோதனை கிட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்த 8 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சிறப்பு மருந்து,மாத்திரைகள், டெஸ்ட் கிட்டுகள் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்வதாக ஐதராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் ஊசி போடுவதற்கு பயன்படும் மருந்துகளை 35 ஆயிரம் ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அதிக விலைக்கு அவர்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து செகந்திராபாத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியம்(36), முஷீராபத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (39), முகமது சாக்கர் (34), கிஷோர்(29), ராகுல் அகர்வால் (29), டெல்லியை சேர்ந்த ககன் கருனா(21) சசி அலி முஹம்மத் (22),பிரோடஸ் முகமத் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.


Share this News: