பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான மல்விந்தர் சிங் காங் உட்பட 20 பாஜக தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து பாஜக பல இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூட முடியவில்லை. பஞ்சாபில் எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி மன்றங்கள் / நகர்ப்புற பஞ்சாயத்துகளில்…

மேலும்...

பாஜக மண்ணை கவ்வ வேண்டியதுதான் – பாஜக தலைவர்கள் அதிருப்தி!

புதுடெல்லி (24 ஜன 2021): விவசாயிகளின் வேலைநிறுத்தத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து பஞ்சாப் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நினைத்திருந்தால் வேலைநிறுத்தத்தை ஒரு நாளில் முடித்திருக்க முடியும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் லட்சுமி காந்தா சாவ்லா கூறினார். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாஜாக தலைவர் தெரிவித்துள்ளார். பஞ்சஸப்பில் நகராட்சி மன்றத்…

மேலும்...

கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது. அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு…

மேலும்...

செல்பி எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் செல்போன் அபேஸ்!

சண்டீகர் (05 பிப் 2020): பஞ்சாப்பில் சாலையின் ஓரமாக நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் செல்போனை திருடர்கள் பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இரண்டு பெண்கள் சாலை ஓரமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சாலையில் நின்றவாறு திருடன், திருடன் என்று கத்தியுள்ளனர். அப்போது அதே சாலையில் சென்ற பொதுமக்கள்…

மேலும்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது!

கொல்கத்தா (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நான்காவது மாநிலமாக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) திரும்பப் பெறவும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) முன்மொழியப்பட்ட பான்-இந்தியா செயல்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மேற்கு வங்க நாடாளுமன்ற…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசும்…

மேலும்...

கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு!

மும்பை (19 ஜன 2020): கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிர அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது மூன்றாவது மாநிலமாக…

மேலும்...

குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்து கபில் சிபல் அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப் பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – அதிரடி காட்டிய பஞ்சாப் அரசு!

சண்டீகர் (17 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு…

மேலும்...