பிப்ரவரி 14 ஐ கறுப்பு இரவாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்ல் இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு; கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான…

மேலும்...

நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் திடீர் போராட்டம்!

நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக…

மேலும்...

சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

போலீசாரை ஏமாற்றிய இந்து ஜனநாயக அமைப்பினர்!

சென்னை (26 ஜன 2020): போராட்டத்திற்கு 200 பேர் வருவோம் என்று கூறிவிட்டு வெறும் 16 பேர் மட்டுமே வந்த இந்து ஜனநாயக அமைப்பினர் போலீசாரை தலையில் கை வைக்க வைத்துவிட்டனர். பெரியாருக்கு எதிராக ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், திக தலைவர் கி.வீரமணி வீட்டை முற்றுகையிடப் போவதாக இந்து ஜனநாயக அமைப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு 200 பேருக்கு மேல்…

மேலும்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினியிடம் விசாரணை – பரபரப்பை கிளப்பும் விசாரணை அதிகாரி!

சென்னை (25 ஜன 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசாரணையை அடுத்து வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “18 ஆம் கட்ட விசாரணை கடந்த…

மேலும்...

பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் அட்டூழியம்!

போபால் (20 ஜன 2020): போபாலில் பாஜகவினர் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலி பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டத்தை கொச்சைப் படுத்திய ஊடகங்கள்!

புதுடெல்லி (19 ஜன 2020): டெல்லி ஷஹீன்பாக் குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தை ஊடகங்கள் சில கொச்சைப்படுத்தியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் பெண்களின் சரித்திரப் போராட்டம் -வீடியோ!

புதுடெல்லி (19 ஜன 2020): தேசிய கொடியுடனும் தேசிய கீதத்துடனும் டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ,…

மேலும்...