பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்த கொரொனா வைரஸ்!
திருவனந்தபுரம் (16 ஏப் 2020): கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே முதலாவதாக கொரோனா தொற்று பரவியது. இந்நிலையில் அங்கு புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் உள்ளன. இதன்மூலம் ‘இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம் தான்’ என முதல்வர்…