முதல்வர் குறித்து பேசியது என்ன? – ஆ.ராசா பரபரப்பு விளக்கம்!

சென்னை (28 மார்ச் 2021): ‘ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசியதை வேண்டுமென்றே சிலர் விரசமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். பெரம்பலூரில் பத்தரிக்கையாளர்கள் மத்தியில் கூறியதாவது: “ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தலைவராக வந்தார். அதனால் அவர் பரிணாம வளர்ச்சி பெற்ற முழுமையான குழந்தை என்று சொன்னேன்.ஆனால், இ.பி.எஸ்., நேர்வழியில், மக்கள் தீர்ப்பால் முதல்வராக வரவில்லை. வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு, குறுக்கு வழியில் வந்தார்….

மேலும்...

மோடி எடப்பாடி குறித்த சர்ச்சை பேச்சு – ஆ.ராசா மீது வழக்கு பதிவு!

சென்னை (28 மார்ச் 2021): திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது கனிமொழி திடீர் பாய்ச்சல்!

சென்னை (27 மார்ச் 2021): திமுகவினரின் சர்ச்சையான பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

பிரிக்கப்போவது அமமுக – ஜெயிக்கப்போவது திமுக!

சென்னை (24 மார்ச் 2021): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். பல முனை தாக்குதல் நடத்தப்படுவதால் யாருக்கு…

மேலும்...

பாஜக அண்ணாமலை, சைதை துரைசாமி வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு!

சென்னை (20 மார்ச் 2021): தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…

மேலும்...

அவர் விவசாயி கிடையாது விஷ வாயு – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

தஞ்சாவூர் (19 மார்ஷ் 2021): முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி அவர் விவசாயி கிடையாது விஷ வாயு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறும் முதல்வர் பழனிசாமியின் நாக்கு அழுகிபோகும். காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து 50 ஆண்டுகள் காப்பாற்றியவர் கருணாநிதி….

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக…

மேலும்...

ஒலை குடிசை வீட்டிலிருந்து ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர்!

திருத்துரைப்பூண்டி (18 மார்ச் 2021): திருத்துரைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் என அறியப்படுகிறார். 49 வயதான மரிமுத்து 1994 முதல் அரசியலில் இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கடவக்குடி என்ற விவசாய கிராமம். ஓலை குடிசையில் வாழும் மாரிமுத்துவின் வீடு கடந்த காஜா சூறாவளியில் சேதமடைந்தது. பழுதுபார்க்கக்கூட முடியாதபடி தார்ப்பாய் மூலம் மட்டுமே வீடு சரிசெய்யப்பட்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். மாரிமுத்துவின்…

மேலும்...

காங்கிரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சியில் உள்ள ஸ்டாலின்!

சென்னை (15 மார்ச் 2021): தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெரிய கட்சியாக கணிக்கப்படும் காங்கிரஸ் தற்போது வலுவிழந்து இருப்பதால் சீட் கொடுப்பதில் ஸ்டாலின் ஆரம்பம் முதலே கறாராக இருந்தார். எனினும் அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. ஒருவழியாக 25 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால்…

மேலும்...