பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு…

மேலும்...

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை!

சென்னை (01 ஜூன் 2020): தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மேலும்...

இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி!

சென்னை (01 ஜூன் 2020): இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது…

மேலும்...

பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப…

மேலும்...

சென்னை அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கையொட்டி, அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்‍கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்‍காமல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இலவச உணவுக்‍கு, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது கட்டணம் வசூலிக்‍கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்‍கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மே 31-ம் தேதி…

மேலும்...

தள்ளிப்போகிறதா தமிழக சட்டப்பேரவை தேர்தல்?

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்,…

மேலும்...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகரிப்பு – இறப்பு எண்ணிக்கையும் உயர்வு!

புதுடெல்லி (31 மே 2020): இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. கொரோன வைரஸ் காரணமாக க இறந்தவர்களின் எண்ணிக்கை 5164 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 8380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 182142 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86984 பேர்…

மேலும்...

சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை (31 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்….

மேலும்...

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுதான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு…

மேலும்...