சாக வேண்டும் என்றே வீதிக்கு வருகிறார்கள் – யோகி ஆதித்யநாத்தின் விஷம் கக்கும் பேச்சு!
லக்னோ (19 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு வருபவர்கள் சாகுவதற்காகவே வருகிறார்கள் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடூரமாக பேசியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் போரட்டங்களில் கலந்து கொள்ளாத அப்பாவி மக்களும் அடங்குவர். உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும்…