அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுவதா? – முதல்வருக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (17 பிப் 2020): வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் நடந்த திருமணம்!

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறியுள்ளது. இங்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு திருமணம் நடைபெற்றது. நிக்காஹ் முடிந்த நிலையில் மணமக்கள் கையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தை வைத்துக்கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் நான்காவது நாள் போராட்டம் – வீடியோ!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது. இதனை தொடர்ந்து…

மேலும்...

சென்னை ஷாஹீன் பாக் – முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை குவியும் கூட்டம் -வீடியோ!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர். மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். நாளை சட்டசபை தொடங்கும் நிலையில் சென்னை ஷாஹின் பாக் போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

சென்னை ஷாஹின் பாக்கில் சீமானின் சீற்றம்!

சென்னை (16 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதிக்கு வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் பேசிய சீமான் கூறுகையில், “எனக்கு என் பாஸ்போர்டை கொடுங்கள் வேறு நாட்டுக்கு செல்கிறேன் என்ற நிலை தான் உள்ளது. ஜக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்…

மேலும்...

சென்னை ஷஹீன்பாக்: பிப் 19 ல் அனைத்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – VIDEO

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 19ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிட அனைத்து மாவட்ட மக்களும் முடிவு செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று மாலை சந்தித்தனர். அதன் பின் “தேசிய குடிமக்கள்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை மண்ணடியும் போராட்டக் களமானது!

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் மீதான போலீஸ் தாக்குதலை எதிர்த்து சென்னை மண்ணடியில் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மண்ணடியில் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம்…

மேலும்...

தமிழகத்தில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் அப்டேட்: சிஏஏ வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் -வீடியோ!

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. மேலும் சென்னையில் தொடர் போராட்டத்தை பொதுமக்கள் அறிவித்துள்ளனர். முக்கிய கோரிக்கையாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட…

மேலும்...