போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு!

லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் பதஞ்சலி பிராண்டின் கீழ் ராம்தேவ் போலி நெய்யை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினார். ராம்தேவ் ‘கபாலா பதி’ யோகாவை தவறான வழியில் கற்றுத் தருவதாகவும் பாஜக எம்பி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பதஞ்சலியின் பெயரில் நடக்கும் சுரண்டலை…

மேலும்...

பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

சென்னை (01 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது…

மேலும்...

தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத்…

மேலும்...

என் மீதான தாக்குதலுக்கு பாஜக ரூ 1000 கோடி செலவழித்துள்ளது – ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (28 நவ 2022): என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரையானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா,…

மேலும்...

அதிர்ச்சி தரும் அடுத்த வீடியோ லீக் – வெளியிட்ட பாஜக!

புதுடெல்லி (27 நவ 2022): டெல்லி பாஜக வெளியிட்டுள்ள அடுத்த வீடியோ டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வீடியோவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் சத்யேந்தர் ஜெயினை மசாஜ் செய்வது, அடுத்த வீடியோவில் சிறப்பு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற…

மேலும்...

சூர்யா டெய்ஸி ஆபாச ஆடியோ வெளியானதன் பின்னணியில் அண்ணாமலை? – அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்!

சென்னை (27 நவ 2022): பாஜ பெண் நிர்வாகி டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் பேசிய ஆபாச ஆடியோக்களை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கலாம் என்கிற தகவல் பாஜக மூத்த தலைவர்கள அதிர வைத்துள்ளது. பாஜக சிறுபான்மையின பெண் நிர்வாகி டெய்சி சரண், ஓபிசி அணி மாநில நிர்வாகி திருச்சி சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி டெல்லி மேலிடம் உத்தரவிட்டது….

மேலும்...

படுக்கையில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்? – மஹுவா மொய்த்ரா கேள்வி!

கொல்கத்தா (17 நவ 2022): படுக்கையில் இருப்பதாக கூறி ஜாமீன் பெற்றவர் பின்னர் மகளுக்காக எப்படி பிரச்சாரம் செய்கிறார்? என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியதாவது: நரோத்யபாத்யா படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உடல் நலம் கருதி ஜாமீன் பெற்ற குற்றவாளி, மனோஜ் குக்ரானி குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார். “நரோடா பாட்யா படுகொலை வழக்கில் மனோஜ் குக்ரானி…

மேலும்...

குஜராத் தேர்தலையொட்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கு குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்

புதுடெல்லி (10 நவ 2022): இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே மாதிரியான சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை பாஜக செயல்படுத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பாஜகவின் எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்கி,…

மேலும்...

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு!

சிம்லா (08 நவ 2022): சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் 26 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், இளைஞர்…

மேலும்...
Rahul and Modi

குஜராத் சட்டபேரவை தேர்தல் – இன்று அறிவிப்பு!

ஆமதாபாத் (03 நவ 2022): குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கின்றனர். 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...