தமிழ் நாட்டில் தொடர் மின்வெட்டு – அமைச்சர் செந்தில் பாலாஜி செய்வது இதுதான்!

சென்னை (22 ஜூன் 2021): திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே மின்வெட்டு புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றையும் ஓரளவுக்கு மேனேஜ் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவில்லாத தமிழக அரசு!

சென்னை (20 ஜூன் 2021): நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் , வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார். எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே…

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு – நியாய விலை கடைகள் மூலம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை (28 மே 2021):கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை இருப்பு குறித்து அறிந்துகொள்ளும் அரசு இணையதளம்!

சென்னை (18 மே 2021): இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கை இருக்கைகள் உள்ளன ? என்பதை அறிந்து கொள்ளவும், படுக்கைகளை அந்தந்த பகுதிகளில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிக்காக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முகவரி  http://ucc.uhcitp.in/ இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து படுக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும்...

தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கோரிக்கை!

சென்னை (15 மே 2021): தமிழக அரசு நேரடியாக கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முன்வந்துள்ள நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்…

மேலும்...

தமிழக வாக்கு எண்ணிக்கை- 12 மணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 142 142 அதிமுக கூட்டணி 91 91 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0

மேலும்...

தேர்தல் 2021 – தமிழகம் முன்னணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னணி மொத்தம் திமுக கூட்டணி 136 136 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி மற்றவை

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியது குறித்து அதிர்ச்சி தகவல்!

சென்னை (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை நாடெங்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...