ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் உதவி!

துபாய் (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் எடையுள்ள மருந்து பொருட்களை அனுப்பி சனிக்கிழமை அன்று வைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறியதாவது: “கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தங்களது முழு ஆதரவை வழங்கி வருகிறது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு!

துபாய் (01 மே 2020): ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஊதியங்கள் வழங்கப்படுவதை நிறுவன முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் முன்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் – துபாய் இந்திய தூதுவர் எச்சரிக்கை!

துபாய் (21 ஏப் 2020): முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள்…

மேலும்...

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை!

துபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி, இந்தியா,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா…

மேலும்...