Dr.Kafeel Khan-Gorakhpur

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் – டாக்டர் கஃபீல் கான்!

லக்னோ (25 ஜன 2022): 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சட்டசபை தேர்தலில் என்னால் போட்டியிட முடியும். எந்த கட்சி எனக்கு டிக்கெட் கொடுத்தாலும்…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடும் சந்திர சேகர் ஆசாத்!

லக்னோ (20 ஜன 2022): பீம் ஆர்மி தலைவரும், ஆசாத் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரசேகர் ஆசாத், உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். உ.பி. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்ப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். 33 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம்…

மேலும்...
Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை – விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்!

புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

பாஜக அமைச்சரவையில் மூன்றாவது விக்கெட் – கலகலத்துப் போன உ.பி அரசு!

லக்னோ (13 ஜன 2022): உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி வியாழக்கிழமை பாஜகவில் இருந்து விளக்கியுள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜகவின் உறவை முறித்துக் கொண்ட ஒன்பதாவது எம்எல்ஏ ஆனார் தரம் சிங் சைனி. முந்தைய நாள், தரம் சிங் சைனி தனக்கு மாநில அரசு ஒதுக்கிய பாதுகாப்பு அதிகாரிகளையும், வீட்டையும் திருப்பிக் கொடுத்தார், இது அவர் பாஜகவில் இருந்து விலகப் போகிறார் என்ற ஊகத்தைத் தூண்டியது. தரம்…

மேலும்...

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...

ஆட்டம் காணும் பாஜக – அயோத்தியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (13 ஜன 2022): உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடே எதிர்பார்க்கும், உத்திர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2 பாஜக அமைச்சர்கள் உட்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் பாஜக அங்கு ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியில் போட்டியிடுகிறார். டெல்லியில் நடைபெற்ற பாஜகவின்…

மேலும்...

உத்திர பிரதேச தேர்தலில் திடீர் திருப்பம் – மாயாவதியின் அறிவிப்பால் கட்சியினர் அதிர்ச்சி!

லக்னோ (12 ஜன 2022): உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியினர் அறிவிப்பு லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் மிஸ்ரா இதை தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும், கூட்டணி எதுவும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பாஜக சார்பில் 20 முஸ்லிம் வேட்பாளர்கள் – சூடுபிடிக்கும் உ.பி தேர்தல் களம்!

லக்னோ (11 ஜன 2022): உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களையாவது நிறுத்த வேண்டும் என்று பாஜக மத்திய தலைமையிடம் சிறுபான்மை மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது. 2017 தேர்தலில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. “முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் இருக்கும் பல தொகுதிகள் உள்ளன. பல இடங்களில் நாங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். சம்பல், மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,” என்று…

மேலும்...