அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின்…

மேலும்...

முன்னாள் அமைச்சருக்கு நடிகையுடன் தொடர்பு – எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும் – பகீர் கிளப்பும் புகழேந்தி!

சென்னை (22 ஜூன் 2021): முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி பீதியை கிளப்பியுள்ளார். நடிகை சாந்தினியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இந்நிலையில்தான், புகழேந்தி ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. இது பற்றி செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசும்போது , “மணிகண்டன் முதலில்…

மேலும்...

நடிகை கர்ப்பம் – முன்னாள் அமைச்சர் கைது!

சென்னை (20 ஜூன் 2021): நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

அந்த ஒருமணி நேர ஆடியோ – ஓபிஎஸ்சுக்கும் ஆப்பு? – பரபரப்பில் அதிமுக!

சென்னை (15 ஜூன் 2021): சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ வெளியாகிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. . சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். ஏற்கனவே இரட்டை தலைமையில் இருக்கும் கட்சிக்கு இது பெரிய தலைவலியை ஏற்ப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த புகழேந்தி பாமகவுக்கு எதிராக கருத்து சொல்லவும்…

மேலும்...

கூட்டணியில் சலசலப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் முடிவு!

சென்னை (14 ஜூன் 2021): சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவுடன் பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவின்…

மேலும்...

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? – சுகாதரத்துறை அமைச்சர் பதில்!

சென்னை (11 ஜுன் 2021):  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? என்ற ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக  சுகாதரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என்ற செய்திகள் திடீரென கிளம்பின.. எனவே, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்..அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர்கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்…

மேலும்...

இரட்டை இலையும் இரட்டை தலைமையும் – ஜூன் 14 ல் முக்கிய கூட்டம்!

சென்னை இ(09 ஜூன் 2021): அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஜூன் 14 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது. வரும் ஜூன் 14 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது என முன்னாள் அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; இந்நிலை தொடரும். அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம்….

மேலும்...

பேக்கரியை துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!

மதுரை (08 ஜூன் 2021): ஊரடங்கு காலத்தில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கால் இந்த பேக்கரி அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்தனர். அவர்கள் பேக்கரி முன் போடப்பட்டிருந்த…

மேலும்...