கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின்…

மேலும்...

யானை கொல்லப்பட்டது எப்படி? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

திருவனந்தபுரம் (06 ஜூன் 2020): கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர்…

மேலும்...

ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் – முதல்வர் பிணராயி விஜயன் தகவல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரள மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான…

மேலும்...

கேரளா சம்பவத்துக்கு மதச்சாயம் பூசுவதா? – பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மதச்சாயம் பூசுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை….

மேலும்...

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த முஸ்லிம் எதிர்ப்புப் பொய் பிரச்சாரம்!

திருவனந்தபுரம் (04 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம்களை குறிவைத்து பரப்பப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரம் பொய் என்று அம்பலமாகியுள்ளது. கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால்…

மேலும்...

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தால் யானை கொல்லப்பட்டதா? – வனத்துறையினர் விசாரணை!

திருவனந்தபுரம் (04 ஜூன் 2020): கேரளாவில் காடுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருதால் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதா? என்று கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முக்கிய விபரங்கள் ஏதும் புலப்படவில்லை. ஏனெனில், யானைக்கு காயம்பட்டு 2 வாரங்களுக்கு பின்னரே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையை தான்…

மேலும்...

இந்துத்வா அமைப்பினர் கைது!

எர்ணாகுளம் (27 மே 2020): தேவாலயம் செட்டை உடைத்தெறிந்தது தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர்…

மேலும்...

இந்து அமைப்பினரால் கோவில் அருகே இருந்த தேவாலயம் செட் இடித்து தகர்ப்பு!

எர்ணாகுளம் (25 மே 2020): சினிமா படபிடிப்பிற்காக கோவில் அருகே போடப்பட்டிருந்த சர்ச் செட் இடிக்கப்பட்டது. பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் தேவாலயம்…

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி!

திருவனந்தபுரம் (18 மே 2020): கொரோனா நெருக்‍கடி இடையே தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்‍கு ஓய்வளிக்‍கும் வகையில், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. கேரளாவில், கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே பணி செய்யும் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய, 2 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டன. இந்த குழுக்‍குள், மாநில அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி, போலீசார், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம்…

மேலும்...