சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

புதுடெல்லி (01 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் புதுடெல்லி வந்ததடைந்தனர். கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். இது சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

பில்கேட்ஸ் மகள் முஸ்லிம் இளைஞரை மணக்கிறார்!

நியூயார்க் (31 ஜன 2020): பில்கேட்ஸின் மகள் ஜெனிஃபர் கேத்தரின் முஸ்லிம் இளைஞரை மணப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் காதலனும் முஸ்லிம் இளைஞருமான நேயல் நஸ்ஸருடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். ஜெனிஃபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தை வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் தெரிவித்து நேயல் நாஸருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். பில்கேட்ஸ் தனது மகள் ஜெனிஃபர் அவரது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்தற்கு, “என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது. வாழ்த்துகள்”…

மேலும்...

92 வயது பெல்ஜியம் மூதாட்டி இஸ்லாம் மதத்தை தழுவினார்!

பெல்ஜியம் (30 ஜன 2020): பெல்ஜியத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி முஸ்லிம் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். பெல்ஜியம் நாட்டில் காப்பகத்தில் வசித்து வந்த ஜியோர்கேட் என்ற மூதாட்டி அங்கிருந்து வெளியாகி முஹம்மது என்ற அவரது பழைய அண்டை வீட்டாருடன் வசிக்க விரும்பினார். முஹம்மது குடும்பத்தினரின் நடை, உடை, உபசரிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட ஜியோகேட் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். முஹம்மது மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் எனினும் அவர் பெல்ஜியத்தில் ஜியோகேட் குடும்பத்தினரின்…

மேலும்...

கொரோனா வைரஸின் பலி எண்ணிக்கை 170 ஆனது – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

பீஜிங் (30 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆனது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,700 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும்…

மேலும்...

கொரோனா வைரஸ்: 6000 பேர் பாதிப்பு – 132 பேர் பலி!

பீஜிங் (29 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்த பரபரப்பு படத்தை வெளியிட்ட சீனா!

பீஜிங் (28 ஜன 2020): சீனாவில் பரவி வரும் வைரஸ் நோய் குறித்த பரபரப்பு படத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 2800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

தயவு செய்து உதவுங்கள் – சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சி தகவல்!

பீஜிங் (27 ஜன 2020): “சீனாவில் 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்; எங்களுக்காக உதவுங்கள்!” என்று செவிலியர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1,970 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 80 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், வுஹானில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும்…

மேலும்...

கொரோனா வைரஸுக்கான காரணம் – வெளியாகும் பரபரப்பு பின்னணி!

பீஜிங் (27 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தி வரும், இதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என பல்வேறு ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், பயோ-வெப்பன் ஆய்வுக் கூடம் மூலமாக பரவியிருக்கும் என இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...

ரியாலிட்டி ஷோ-வில் சோகம் – மகள் பாடும்போது தாய் மரணம் (VIDEO)

ஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது. ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தபடியே தாய் உயிரிழந்த சம்பவம், கேட்போரை கலங்க வைத்துள்ளது. இந்தோனேசியாவில் லிகா தங்தத் ரியாலிட்டி ஷோ (பாடல் போட்டி) நடந்து வருகிறது இதில் வெல்பவருக்கு 28,000 யூரோ…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

பீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய…

மேலும்...