மகளிர் லீக்கின் (முஸ்லிம் லீக்)தேசிய தலைவராக பாத்திமா முசாபர் தேர்வு!

சென்னை (05 நவ 2021): மகளிர் லீக்கின் தேசிய தலைவராக பாத்திமா முசாபர் (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் லீக்கின் தேசிய ஆலோசனைக் குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டப் பட்டம் மற்றும் இஸ்லாமியப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பாத்திமா முசாஃபர் சிறந்த பேச்சாளர் மற்றும் அமைப்பாளர். முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், தமிழ்நாடு வக்பு வாரியம், முஸ்லீம் மகளிர் உதவி சங்கம், முஸ்லிம் பெண்கள் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்….

மேலும்...

புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பலி!

புதுச்சேரி (05 நவ 2021): புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கலைநேசன் (37) என்பவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய பட்டாசு பைகளை வாங்கி. பைக்கில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எதிர் பாராத விதமாக பட்டாசு பைக்கிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இதில் கலைநேசனும், அவரது மகன் பிரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தானர்….

மேலும்...

நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் – விமான நிலையத்தில் பரபரப்பு -(வீடியோ இணைப்பு)

பெங்களூரு (03 நவ 2021): நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படபிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்திருந்த மர்ம நபர் ஆவேசத்துடன் விஜய் சேதுபதி மீது பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார். இதில் விஜய் சேதுபதி நிலை தடுமாறினார். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. உடன் பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்றினர்…

மேலும்...

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை:(01நவ2021):வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது. இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும்,…

மேலும்...

ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ரஜினி…

மேலும்...

ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது – நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை (28 அக் 2021): மமக எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது என்ற மனு மீது விசாரனையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். மனித…

மேலும்...

வசமாக சிக்கிக் கொண்ட அண்ணாமலை – பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு மழுப்பல் பதில்!

சென்னை (27 அக் 2021): வாயை கொடுத்து பெறும் நிறுவனத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

மேலும்...

பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...

பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

சென்னை (26 அக் 2021): சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசிய புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் இது இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன்…

மேலும்...

மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி!

சென்னை (25 அக் 2021): மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பழைய அடையாள அட்டையைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது இல்லையென்றால் பள்ளிச்சீருடை , பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

மேலும்...