திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் 48 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!
சென்னை (15 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுகவை சேர்ந்த 48 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டவர்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். வேலூர் மாநகரம், 11-வது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்…