திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!

சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 40 தொகுதிகளையும் கைபற்ற வேண்டும் என்று திமுக முனைப்போடு செயலாற்ற தொடங்கிவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த இலக்கை நோக்கி திமுக நகர தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன்…

மேலும்...

பிரேமலதா முன்னாடி ஓட்ட கட்சி நிர்வாகிகள் பின்னால் ஓட – பரபரத்த போராட்டம்!

சென்னை (05 ஜூலை 2021): பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடத்தப பட்ட போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிள் ஒட்டியபடி கலந்துகொண்டார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். விலை உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ம் தேதி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று (ஜூலை 5) பல்வேறு…

மேலும்...

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2021): அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்...

ஹேப்பி மூடில் தேமுதிகவினர் – காரணம் இதுதான்!

சென்னை (08 அக் 2020): தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக, நேற்று அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல்…

மேலும்...

வாசம் பிடித்த வாசன் – மோசம் போன தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2020): மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜி.கே.வாசன் அறிவிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மேல்சபை எம்.பி. பதவிக்கான வாய்ப்பை வழங்கி இன்று அ.தி.மு.க. சார்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தே.மு.தி.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தே.மு.தி.க., மேல்சபை எம்.பி. பதவியை கேட்டிருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போதே அதற்கு உறுதியும் அளிக்கப்பட்டு இருந்தது. அனால் அ.தி.மு.க. தலைமை திடீரென இவ்வாறு…

மேலும்...