அண்ணாத்தவை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!

சென்னை (24 நவ 2021): பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராவதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில்…

மேலும்...

அண்ணாத்த திரைப்படம் எப்படி உள்ளது? பொதுமக்கள் பார்வை!

நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக தீபாவளி (இன்று) வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க குடும்பங்களை டார்கெட் வைத்து இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலர் இந்த திரைப்படம் எதிர் பார்த்தது போல் இல்லை என்கின்றனர். சிலர் படுபோர் என்றும் தொலைக்காட்சி தொடர் போல உள்ளது என்றும் பதிவு செய்து வருகின்றனர். பலர் சிறுத்தை சிவா ரஜினி காம்போ ஒர்க்…

மேலும்...

ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது…

மேலும்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...

கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக…

மேலும்...