ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு – நீதிமன்றம் உத்தரவு!

தேனி (23 ஜன 2020): துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பியின் ஆவின் தலைவர் பதவியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட ஆவினை நிர்வகிக்க, தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ்.,சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். மேலும், துணை தலைவராக செல்லமுத்து மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அம்மாவாசி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையைல் மனு அளித்திருந்தார். அதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும்…

மேலும்...