பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 4: நாணயம் வந்தது! வட்டியும் வந்தது! டும் டும் டும்!

ஒவ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப் படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’! “நாணயங்கள் தேவைப்படுபவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் கடைக்கு வாருங்கள். உங்களுக்கான நாணயங்களை நான் தயார் செய்து வைக்கிறேன்.” என்று ஊர் மக்களை அனுப்பி வைத்தான்…

மேலும்...

பணம் வந்த கதை பகுதி – 3 தோன்றியது பணம்!

குறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான். “இங்கப் பாருங்க மக்களே, மேட்டர் ரொம்ப சிம்பிள். நம்ம எல்லோரிடமும் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பொருளை நீங்க விற்கனும்னு நினைச்சா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்; அந்தப்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்!

நம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது. அவனது வாடிக்கையாளர்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்குப் பகரமாக அரிசி, பருப்பு, செருப்பு என்று எதையாவது கொண்டு வந்துக் கொடுப்பார்கள். அய்யாவுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் அவன் இருக்குமிடத்திலேயே கிடைத்து விடுவதால் அவன் சந்தைக்குச் சென்று கூவ வேண்டிய தேவை ஏற்படாது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது அவனுடைய தொழிற்சாலைக்குள் தலையை நீட்டி, “என்னாண்ட ஆட்டுக்குட்டி கீது.. உன்னாண்ட…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி 1 – சந்தையில் விளைந்த சண்டை!

இப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதில் வரும் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ‘கதை’ என்ற சொல்லுக்கு ஒரு கவர்ச்சி உண்டு என்பதால் நானும் இதை ‘கதை’ என்றே சொல்லப் போகிறேன். நீங்களும் அவ்வப்போது ‘ம்..’ போட மறந்து விடாதீர்கள். இந்தக் கதையின்…

மேலும்...