பணம் வந்த கதை பகுதி – 4: நாணயம் வந்தது! வட்டியும் வந்தது! டும் டும் டும்!
ஒவ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப் படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’! “நாணயங்கள் தேவைப்படுபவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் கடைக்கு வாருங்கள். உங்களுக்கான நாணயங்களை நான் தயார் செய்து வைக்கிறேன்.” என்று ஊர் மக்களை அனுப்பி வைத்தான்…