கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

தூத்துக்குடி (16 ஜூன் 2021): தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி வித்யா(25). கர்ப்பிணியான இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆக்சிஜன் குறைவு காரணமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறுநீரகம், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. 3 குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இல்லை…

மேலும்...