கொச்சி (18 டிச 2020): கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் மலையாள நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நடிகை தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அந்த நடிகை சமூக ஊடகங்களில் தகவலாக வெளியிட்டுள்ளார். அதேவேளை இதுகுறித்து நடிகை போலீசில் புகார் அளிக்கவில்லை.
ஆனால் காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.