இலங்கையில் பர்தாவுக்கு தடையில்லை!

Share this News:

கொழும்பு (29 ஏப் 2019): இலங்கையில் பர்தா அணிய தடை விதிக்கப் படவில்லை முகத்தை மறைக்கும் உடைகளுக்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடைக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இன்று முதல் பெண்கள் முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நலன் கருதி முக அடையாளத்தை வெளி காட்டுவதற்காக இந்த சட்டம் இயற்றப் பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்காமல் வழக்கமாக அணியும் பர்தாவை அணிவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply