இரண்டே வார்த்தையில் பதிலடி – எச்.ராஜாவை சீண்டிய சீமான்!

Share this News:

சென்னை (11 ஜன 2020): எச்.ராஜாவுக்கு சீமான் இரண்டே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்படார். மேலும் சென்னை மெரினாவில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி எச்.ராஜா தலைமயில் போராட்டம் நடைபெற்றது.

அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். அப்போது “ஆபரேஷன் சக்சஸ்” என்று ட்வீட்டினார் எச்.ராஜா.

இந்நிலையில் நெல்லை கண்ணனுக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். காலையும் மாலையும் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு பிணை கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. ஆபரேசன் பெயிலியர்!” என்று ராஜாவை சூசகமாக கேலி செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply