ரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு!

Share this News:

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

ரயில் சேவை உதவி மைய போன் எண், 139 வழியாக, பயணத்தை ரத்து செய்தவர்களும், 90 நாட்கள் வரை, முழு கட்டணம் திரும்பபெறலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.

இப்பயணியர், இணையதளம் வழியாக, டிக்கெட் ரத்து செய்ய தேவை இல்லை. நிலையங்களில் முன்பதிவு செய்தவர்கள், ‘கவுன்டர்’கள் மூடப்பட்டுள்ளதால், நேரில் செல்ல வேண்டாம். ஏப்., 15ல் இருந்து, கவுன்டர்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம்.

கவுன்டருக்கு வராமல், கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு, டிக்கெட் பரிசோதகர் அல்லது நிலைய அதிகாரியிடம், மூன்று மாதத்திற்குள் பயண டிக்கெட்டை சமர்ப்பித்து, டிக்கெட் டிபாசிட் ரசீது பெற வேண்டும்; அன்றில் இருந்து, 60 நாட்களுக்குள், தலைமை வர்த்தக மேலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து, கட்டணத்தை பெறலாம். கூரியர் தபால் வழியாகவும் சமர்ப்பித்து, வங்கி கணக்கு வழியாக, கட்டணத்தை திரும்பப் பெறலாம்.

வரும், ஏப்., 14க்கு பின், ரயிலில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்ய, கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.இணையதளம் வழியாக, எப்போது வேண்டுமானாலும், முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

‘கொரோனா வைரஸ்’ பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, ஏப்., 14 வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply