தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் கைது!

Share this News:

மன்னார்குடி (14 மார்ச் 2020): தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோமாளித்தனமாக பதிவிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.

இதனை அடுத்து ரகுராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் மன்னை சாதிக்கை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply