உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம். தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த சம்பவம் மூன்று…

மேலும்...

13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி மூடல்!

தோஹா (14 செப் 2022): கத்தாரில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்பிரிங் ஃபீல்டு இன்டர்நேஷனல் பள்ளியை அரசு மூடியுள்ளது. நான்கு வயது சிறுமியின் மரணத்தில் பள்ளி ஊழியர்கள் தவறிழைத்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது. கோட்டயம் சிங்கவனத்தைச் சேர்ந்த அபிலாஷ் சாக்கோ – சௌமியா தம்பதியரின் மகள் மின்சா ஞாயிற்றுக்கிழமை பள்ளி பேருந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பேருந்தில்…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர். மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு…

மேலும்...

பொறியியல் மாணவி படுகொலையில் வகுப்பு வாத சாயம் பூச முயற்சி!

மைசூர் (08 செப் 2022): மைசூருவில் பொறியியல் மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முக்கிய பத்திரிகையாளர்கள் உட்பட இந்துத்துவா ஆதரவாளர்கள் பலர் வகுப்புவாத சாயம் பூச முயற்சியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹுசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 21 வயதான பொறியியல் மாணவி அபூர்வா ஷெட்டி, கொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது காதலன் ஒருவருடன் உடன் தங்கியிருந்ததாகக் கூறியுள்ள ஒரு மாலை நாளிதழான ‘ஸ்டார் ஆஃப் மைசூர்’ கொல்லப்பட்ட மாணவியுடன் இருந்தது ஆஷிக் என்ற…

மேலும்...

பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர்…

மேலும்...

அரியலூர் மாணவி தற்கொலை – பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம்!

தஞ்சாவூர் (24 ஜன 2022): அரியலூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சையில் தனியார் பள்ளி விடுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மாணவியின் தற்கொலைக்கு மதம் மாற கட்டாயப்படுத்தியதே காரணம் என எழுந்த குற்றச்சாட்டை காவல்துறையினர் ஏற்கனவே மறுத்திருந்தனர். இந்நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் உடலை…

மேலும்...

ஐஐடி மாணவர் கல்லூரி மடியிலிருந்து குதித்து தற்கொலை

மும்பை (17 ஜன 2022): மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர் கல்லூரி வளாகக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடைய இரண்டாம் வருட முதுகலைப் பயிலும் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் திங்கள் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வளாக கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அவரது தங்கும் விடுதியில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் குறிப்பில்,…

மேலும்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் ரஜினிகாந்த் கைது!

கரூர் (17 நவ 2021): கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார்…

மேலும்...

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தாலிபான் விருது!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடைபெற்ற உயர்கல்விக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுகளில் ‌சல்ஜி பரன் என்ற மாணவி முதலிடம் பெற்றார். அவருடன் முதல் பத்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா உயர்கல்வி அமைச்சரக அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தாலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பகி ஹக்கானி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும்...