அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி…

மேலும்...

பாஜக தலைவர் சுட்டுக்கொலை – டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லி (21 ஏப் 2022): ஏப்ரல் 20, புதன்கிழமை அன்று டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர் ஜீது சௌத்ரி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 8:15 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, புதன்கிழமை இரவு 8:15 மணியளவில், ரோந்துப் பணியில் இருந்த அதிகாரிகள்,…

மேலும்...

இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கராச்சி (09 மார்ச் 2022): 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்ற IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி என கருதப்படும் மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் , மார்ச் 1 அன்று கராச்சியின் அக்தர் காலனியில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம், 179 பயணிகள் மற்றும்…

மேலும்...

திண்டுக்கல்லில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி!

திண்டுக்கல் (03 ஜன 2022): திண்டுக்கல்லில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.‌…

மேலும்...

கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!

சண்டிகர் (27 அக் 2020): கல்லூரி வாசலில் வைத்து மாணவி சுட்டுக் கொலை செய்யப் பட்ட சமப்வம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் நேற்று மதியம் கல்லூரிக்கு மாணவி ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பெண்களை வழிமறித்து அவர்களில் ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்கின்றனர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அந்த இளைஞர் தான்…

மேலும்...

தலித் வாலிபர் சுட்டுக் கொலை – உயர் ஜாதி இளைஞர்களின் வெறிச்செயல்!

லக்னோ (08 ஜூன் 2020): உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் சனிக்கிழமை தலித் வாலிபரை சில இளைஞர்கள் சுட்டுக் கொன்றனர். டோம்கேடா கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இரவு 17 வயது விகாஸ் ஜாதவின் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை பிரகாஷ் ஜாதவ் கூற்றுப்படி, “அவர் (மார்ச் 31 அன்று இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு) ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயர் சாதி கிராம இளைஞர்களுடன் வாக்குவாதத்தில்…

மேலும்...

கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை!

லக்னோ (25 பிப் 2020): கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் தாய்வழி மாமா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் கோராக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் தன் சொந்த செலவைல் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றி புகழ் பெற்றவர் டாக்டர் கஃபீல் கான். ஆனால் அவர் மேலேயே பழி போட்டு சிறையில் தள்ளியது அரசு. அதேவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர்…

மேலும்...

லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும்...

விஸ்வ இந்து மஹாசபா தலைவர் சுட்டுக் கொலை!

லக்னோ (02 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், இருவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவத்சவா கையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

மேலும்...

சினிமா பாணியில் சிறுவர்கள் சிறைபிடிப்பு – கொலை குற்றவாளி சுட்டுக் கொலை!

பரூக்காபாத் (31 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் 20 சிறுவர்களை சிறைபிடித்த கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் அருகே உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடையவர், பிறந்த நாள் பார்டிக்காக நேற்று பிற்பகலில் சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பார்டிக்கு வந்த 20 சிறுவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்ட அவர் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்தார். போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள்…

மேலும்...