அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் – ஆனால் ட்விஸ்ட் இருக்காமே!

ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் வேட்பாளரை…

மேலும்...

எடப்பாடிக்கு துணிச்சல் வந்துவிட்டதா? – பின்பு பார்த்தால் வேறு கதை!

ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அதிமுக தேர்தல் பணிமனையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி…

மேலும்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம்…

மேலும்...

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட அதிமுக பெண் நிர்வாகி!

சென்னை (12 டிச 2022): ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியின் பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற…

மேலும்...

திமுக ஆதரவில் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது. அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம்….

மேலும்...

வந்தார் ஓபிஎஸ் வராத ஈபிஎஸ்!

சென்னை (17 அக் 2022): சட்டபேரவை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார்…

மேலும்...

ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (16 ஜூலை 20222): முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும்...

ஓபிஎஸ்சுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

சென்னை(11 ஜூலை 2022): அதிமுக பொதுக் குழு நடத்த தடை இல்லை என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தினம் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக விதிகளின்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம். மேலும் 82 சதவீதம் பேர் பொதுக் குழுவை கூட்ட கோரிக்கை விடுத்ததால் கட்சி உள்கட்சி…

மேலும்...

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் – போஸ்டரால் பரபரப்பு!

மதுரை(28 ஜூன் 2022): அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் க்கும் இபிஎஸ் க்கும் இடையே ஒற்றை தலைமை போட்டி நிலவி வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இபிஎஸ் இன் ஒற்றை தலைமை முயற்சிக்கு எதிராக ஒபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நடியுள்ளார். இதற்கிடையே ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, கேபிமுனுசாமி,ஜெயக்குமார்…

மேலும்...