பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

இஸ்லாமாபாத் (04 ஏப் 2022): பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் நேற்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். அதேவேளை இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே…

மேலும்...

இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு!

இஸ்லமாபாத் (03 ஏப் 2022): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான்கான் கோரிக்கை வைத்துள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. பாகிஸ்தானில் உள்ள 342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை இம்ரான் கானுக்கு உள்ளது….

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!

இஸ்லாமாபாத் (20 மார்ச் 2021): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

இஸ்லாமாபாத் (14 ஆக 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் குறித்து அறியாதவர்களை அதிகாரிகளாக நியமித்திருப்பதாக இம்ரான் கான் மீது முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்தத் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மியாண்தத் விளையாடியபோது இம்ரான் கான் ஆல்ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர். சக வீரர்களாகவும், நண்பர்களாகவும் இருவரும் இருந்து வந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில், கிரிக்கெட் பற்றிய எந்த விசயங்களும் அறியாத நபர்களை…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்…

மேலும்...

சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – இம்ரான் கான் எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் (27 பிப் 2020): பாகிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதி வழி போராட்டத்திற்கு எதிராக இந்துத்வாவினர் வன்முறையில் ஈடுபட்டதால் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ட்விட்டரில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் வசிக்கும்…

மேலும்...

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட இம்ரான் கான் கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் 40 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது தொடா்பான 2 நாள் சா்வதேச மாநாடு, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்றுள்ளாா். அவா் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசியதாவது: இந்தியாவின் தற்போதைய கொள்கைகளால், அங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர…

மேலும்...