டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? – நேரில் பார்த்தவர் சாட்சியம்!

புதுடெல்லி (04 ஜூலை 2020): பிப்ரவரி 2020-இல் நடந்த டெல்லி கலவரத்தைப் பிரத்யேகமாக முன்னின்று நடத்தியவர் பாஜக கவுன்சிலர் என ‘நேரில் பார்த்தவர்’ சாட்சி பகர்ந்துள்ளார். “முல்லோன்கோ நிப்டாதோ” அல்லது “முஸ்லிம்களை வளைக்கச் செய்யுங்கள்” – வடகிழக்கு டெல்லியின் பாகீரதி விஹாரில் வகுப்புவாத வன்முறையின் போது பாஜக கவுன்சிலர் கன்ஹையா லால் தெரிவித்த உத்தரவுகள்தான் இவை, என அந்த பகுதியில் வசிப்பவர் டெல்லி காவல்துறைக்கு சாட்சி அளித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடந்த…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் இந்துக்களுக்கு உதவிய போலீஸ் – ஆதாரத்துடன் நிரூபனம்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இந்துக்களுக்கு போலீசாரே உதவியது வீடியோ ஆதாரத்துடன் நியூயார்க் டைம்ஸ் நிரூபித்துள்ளது. டெல்லி கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி இனப்படுகொலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த இனப்படுகொஅலியின்போது காவல்துறையும் டெல்லி நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் பலராலும் கண்டிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது….

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர் கான்!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு,…

மேலும்...

டெல்லி இனப்படுகொலை நடந்த பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): டெல்லியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் கடசியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். டெல்லி இனபப்டுகொலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 3 நாட்களாக அவை முடங்கியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின் பிரிஜ்புரி பகுதியில் வன்முறையால் சேதமடைந்த இடங்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய…

மேலும்...

அமித் ஷா பதவி விலகும்வரை நாடாளுமன்றம் நடக்காது – எதிர் கட்சிகள் திட்டவட்டம்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பிரதிபலித்து வருகின்றன. டெல்லி…

மேலும்...

டெல்லி கலவரத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்த முஸ்லிம்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார் அய்யூப் அஹ்மது என்ற முஸ்லிம். டெல்லியில் கடந்த வாரம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்களிடம், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் புகுந்த வன்முறை கும்பல், நடத்திய இனப்படுகொலையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர், 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறை நடந்தபோது, ஒரு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 45 வயது மதிக்கத்தக்க…

மேலும்...

இது டெல்லி அல்ல கொல்கத்தா – மம்தா பானர்ஜி பொளேர்!

கொல்கத்தா (02 மார்ச் 2020):டெல்லியில் நடைபெற்றதைப் போல் இங்கும் ‘கோலி மாரோ’ என்று கூறிவிட்டு ஊர் சுற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் கோலி மாரோ என்று கோஷமிட்ட மூவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அதையடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “பாஜக பேரணியில் டெல்லியைப் போல் ‘கோலி மாரோ’ என்று…

மேலும்...