சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப்…

மேலும்...

ரீல்ஸ் மோகம் – மூவர் பலி!

காஜியாபாத் (15 டிச 2022): உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரயில் தண்டவாளம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டனர். உ.பியைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சமூக வலைத் தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக ஒரு த்ரில் வீடியோவை உருவாக்கும் ஆவல் ஏற்பட்டது. இதனால் ரயில் அருகே வரும்வரை காத்திருந்து ரயிலுக்கு நெருக்கமாக நின்று வீடியோ எடுத்தனர். ஆனால், ரயில்…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி மூடல்!

தோஹா (14 செப் 2022): கத்தாரில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்பிரிங் ஃபீல்டு இன்டர்நேஷனல் பள்ளியை அரசு மூடியுள்ளது. நான்கு வயது சிறுமியின் மரணத்தில் பள்ளி ஊழியர்கள் தவறிழைத்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது. கோட்டயம் சிங்கவனத்தைச் சேர்ந்த அபிலாஷ் சாக்கோ – சௌமியா தம்பதியரின் மகள் மின்சா ஞாயிற்றுக்கிழமை பள்ளி பேருந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பேருந்தில்…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

காவல்துறை காவலில் 18 வயது முஸ்லீம் சிறுவன் மர்ம மரணம்!

புதுடெல்லி (19 பிப் 2022): டெல்லியில் காவல்துறை காவலில் இருந்த 18 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பழுதுபார்ப்பவராக இருந்த 18 வயது சிறுவன் ஜீஷன் மாலிக் ப்ரீத், விஹாரின் குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 20, 2021 அன்று சிகரெட் பாக்கெட்டைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை காவலில் மாலிக் உயிரிழந்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுவன் ஜீஷன் மாலிக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக…

மேலும்...

நடிகை சித்ரா திடீர் மரணம்!

சென்னை (21 ஆக 2021): பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் உயிரிழந்தார். 1990கலில் பெரும்பாலான நடிகர்களுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை சித்ரா. இவர், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்து புகழ் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கோபாலா கோபாலா, பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து உள்ளார். மேலும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து மக்களிடையே…

மேலும்...

இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு…

மேலும்...

புரேவி சூறாவளி – கனமழைக்கு தமிழகத்தில் 11 பேர் பலி!

சென்னை (05 டிச 2020):புரேவி சூறாவளியின் வலிமை குறைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டனர். கஞ்சிபுரத்தில் மூன்று இளம் பெண்கள் ஆற்றில் விழுந்து இறந்தனர். இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர். சென்னை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் இறந்தார். சென்னையில், லேசான மழை பெய்தது. . தெற்கு மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர்…

மேலும்...

ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!

திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி…

மேலும்...

நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு (09 ஜூன் 2020): பிரபல கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சஜ்ரா மாரடைப்பால் உயிரிழந்தர். நடிகர் சிரஞ்சீவி (39) இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் , திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பெங்களூரில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பிரபலங்கள்…

மேலும்...