சின்னாபின்னமாகிபோன பிரபல பிக்பாஸ் பிரபலம் ரைசாவின் முகம்!

பெங்களூரு (18 ஏப் 2021):பிக்பாஸ் தமிழ் முதல் ஸீஸனில் பங்கேற்று புகழ் பெற்றவர் ரைசா வில்சன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தி சேஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் ஃபேஷியல் சிகிச்சைக்காக ஒரு தோல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் அளித்த சிகிச்சை காரணமாக நடிகை ரைஸா முகத்தில் கடும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ரைஸா,…

மேலும்...

சினிமாவிலிருந்து விலகல் – கமல் பகீர் தகவல்!

கோவை (04 ஏப் 2021): அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:- கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன். அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன்….

மேலும்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது – சிக்கும் அரசியல் பிரபலங்கள்!

பெங்களூரு (06 செப் 2020): போதைப் பொருள் கடத்தலில் பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ்…

மேலும்...

அது உண்மைதான் – நடிகர் சுஷாந்த் தற்கொலை: உண்மையை போட்டுடைத்த நடிகை!

மும்பை (23 ஜூன் 2020): தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்ததையும் பின்பு இருவரும் பிரிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ரியா. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில் மும்பை போலீசார் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் காதலித்தது உண்மை தான் என்றும், நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ரியா ஒப்புக்கொண்டார். அதேவேளை இருவருக்கும் மனஸ்தாபம்…

மேலும்...

ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ரஜினி பட நாயகி!

மும்பை (22 ஜூன் 2020): பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் தைரியமான சிலரில் ஒருவர் என்று இவருக்குப் பெயருண்டு! கடந்த வருடம் இராமாயணம் குறித்த கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் இவர் அளித்த பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி. இதற்கான காரணத்தை தனது…

மேலும்...

நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு (09 ஜூன் 2020): பிரபல கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சஜ்ரா மாரடைப்பால் உயிரிழந்தர். நடிகர் சிரஞ்சீவி (39) இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் , திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பெங்களூரில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பிரபலங்கள்…

மேலும்...

பெண்களை போற்றும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்திற்கு மாதர் சங்கம் திடீர் எதிர்ப்பு!

சென்னை (31 மே 2020): ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஒருபுறம் பலராலும் பாராட்டப்படும் நிலையில் மாதர் சங்கம் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜோதிகா தனது கெரியரில் முதல் முறையாக வழக்கறிஞராக நடித்து உள்ளார். நேரடியாக OTT ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் சூர்யா பொன்மகள் வந்தாள் படத்தினை OTT யில் ரிலீஸ் செய்துள்ளார். ஜோதிகா…

மேலும்...

பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்!

பெங்களூரு (27 மே 2020): பிரபல ரியாலிட்டி ஷோவின் மாடலும் சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மெபினா மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை மாண்டியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 75ல் நாகமங்கள தாலுகாவில் உள்ள தேவிஹள்ளி அருகே ஒரு டிராக்டர் மோதியதில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. . மெபினா, தனது இரண்டு நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கோடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. அந்த காரில் மெபினாவுடன் நான்கு…

மேலும்...

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!

மும்பை (27 மே 2020): பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்.. கொரோனா காரணமாக லாக்டவுன் போட்டுவிடவும், அனைத்து ஷூட்டிங்கும் இந்தியா முழுக்க கேன்சல் ஆகிவிட்டது.. இதனால் ஒருவித மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். ஷூட்டிங் எப்போன்னு தெரியலயே என்று புலம்பியும்…

மேலும்...

அரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்!

சென்னை (26 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அரசு பிறப்பித்துள்ள உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஒரு படப்பிடிப்பில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனால் 20 பேரைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேரை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல சின்னத்திரை…

மேலும்...