ஜுனியர் உலகக்கோப்பையை வென்றது இந்திய (பிசிசிஐ)அணி!

ஆன்டிகுவா (06 பிப் 2022): 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம்…

மேலும்...

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிசிசிஐ அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்…

மேலும்...

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி!

புதுடெல்லி (24 நவ 2021): பிசிசிஐ அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த…

மேலும்...

நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “”நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய…

மேலும்...

யார் இந்த முஹம்மது சிராஜ்? – ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கதை!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய (பிசிசிஐ) இடம் பெற்றுள்ளவர் முஹம்மது சிராஜ் . மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரது முதல் போட்டியைக் காண அவரது தந்தை உயிரோடு இல்லை. ஹைதராபாத்தில் ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகன், சிராஜ். ஏழாம் வகுப்பில் இருந்தபோது, ​​பள்ளிக்கு இடையேயான போட்டிகளில் வென்ற அணி யில் சிராஜின் பங்கு மிக முக்கியமானது. , ஆரம்பம் முதலே சிராஜ் டென்னிஸ் பந்தில் விளையாடுவதை தவிர்ப்பார். அவரது வேகமும்,…

மேலும்...

இந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது!

பெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை….

மேலும்...

முடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை (16 ஜன 2020): பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி, என எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 2019 உலகக்…

மேலும்...