அசாதுதீன் ஒவைசிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

புதுடெல்லி (16 மார்ச் 2022): அசாதுதீன் ஒவைசிக்கு “ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது லோக்மத் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் எட்டு வெவ்வேறு பிரிவுகளில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து தலா நான்கு) சிறந்த பங்களிப்புக்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூரி குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பங்களிப்பை ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்தது. கோவிட்-19 தொற்றுநோய்…

மேலும்...

விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர். இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்….

மேலும்...

ராஜீவ் காந்தி பெயரில் விருது அறிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு சிவசேனா அரசு பதிலடி!

மும்பை (11 ஆக 2021): ஐடி துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் மகாராஷ்டிரா அரசு விருது அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் விருது, ஜர் தியானசந்த் கேல் ரத்னா என்று மாற்ற மோடி அரசு எடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அரசு எதிராக அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்து அவர்…

மேலும்...

விருதை திருப்பி அளிக்கிறேன் – வைரமுத்து திடீர் அறிவிப்பு!

சென்னை (29 மே 2021): கேரளாவின் மிக உயரிய விருதான ஓ.என்.வி. விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது சின்மயி மாறும் நடிகை பார்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை…

மேலும்...

சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது!

ஜித்தா (07 டிச 2020): சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினமான கடந்த 5-12-20 அன்று ஜித்தா தமுமுகவிற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தொடர்ந்து உலகமுழுவதும் தன்னார்வலர்கள் கொண்டு மனிதநேயப்பணி செய்யும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்ட து. தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களிடம் துணைத்தூதர் Y. சாபிர் அவர்கள்…

மேலும்...

தென்னிந்திய சாதனையாளர் விருது பெற்றார் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ!

சென்னை (24 பிப் 2020): பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை கமலாலயம் அறக்கட்டளை, சென்னை கலாமின் கனவு அறக்கட்டளை மற்றும் கோவை உயிர் தளிர் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து “தென்னிந்திய சாதனையாளர் விருது – 2019” வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) காலை சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு…

மேலும்...

தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர் – VIDEO

திருவனந்தபுரம் (13 பிப் 2020): தன்னைப் பற்றிய செய்தியை தானே வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா ஷியாம். கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையாள தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரள அரசு சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார். தன்னுடைய புகைப்படமும்…

மேலும்...

விருதை திருப்பி அளித்த இயக்குநர் சேரன்!

சென்னை (02 பிப் 2020): பிரபல எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமீபத்திய படத்துக்கு விமர்சனம் எழுதாததால் அவர்கள் கொடுத்த விருதை திரும்ப அளித்தார் சேரன். பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபலமான அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த…

மேலும்...