பிபிசி ரெய்டு – ஊடக சுதந்திரம் பாழடிப்பு: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (14 பிப் 2023): பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில் ‘எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக…

மேலும்...

கூடுதலாக ஒரு பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (28 டிச 2022): பொங்கல் பரிசாக கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். சென்னை…

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை – முதல்வர் கூட்டத்தில் ஆலோசனை!

சென்னை (22 டிச 2022): கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

மொபைலைக் கீழே வைக்க முடியவில்லை – பாராட்டுகள் குவிகின்றன: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (11 டிச 2022): “மாண்டஸ் புயலை திறமையாகக் கையாண்டதாக, அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:- “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்தபோது கொரோனா-வின் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர்…

மேலும்...

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் – VIDEO

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...

நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் – முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுருத்தல்!

சென்னை (29 அக் 2022): முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற்ற முதல்வர் ஸ்டாலின் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை பேரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் நேற்று இரவு வீடு திரும்பினார். பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் அறிவுருத்தலின் பேரில், முதல்வர் ஸ்டாலின் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள இயலாது. எனவே இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முத்துராமலிங்க…

மேலும்...

திசைமாறும் திருமாவளவன் – கலக்கத்தில் திமுக!

சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா. இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு…

மேலும்...

புதுமைப் பெண் திட்டம் பிச்சை எடுக்கும் திட்டம் – சீமான் சாடல்!

சென்னை (05 செப் 2022): புதுமைப் பெண் திட்டம், மாணவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். இந்த புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற…

மேலும்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (14ஜூலை 2022): கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கொரோனா பாதிப்பால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் தற்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...