ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!

ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது. அதிரடி சோதனை இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும்…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!

மனாமா, பஹ்ரைன் (18 நவம்பர் 2023):  பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான எச் ஆர் எச் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும், கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துர் ரஹ்மானும் இன்று பஹ்ரைனில் சந்தித்துக் கொண்டனர். அதிகாரப் பூர்வமாக நடந்த இச் சந்திப்பில், கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப் பட்டது. இந்த சந்திப்பில் கத்தார்-பஹ்ரைன் பாலம் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில்…

மேலும்...

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...

சவூதியில் பசுமை ரியாத் திட்டத்தின் மூலம் அதிக மரங்கள் நட முடிவு!

ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிரீன் ரியாத்’ என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் 78 வாகன நிறுத்துமிடங்களில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 29ம் தேதி முதல் ஜனவரி…

மேலும்...

தேசிய தினத்தை கொண்டாட தயாராகும் பஹ்ரைன் – விடுமுறை அறிவிப்பு!

மனாமா (14 டிச 2022): பஹ்ரைன் தனது 16வது தேசிய தினத்தை இம்மாதம் வரவேற்கும் இறுதிக்கட்ட ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளது. தேசிய தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 16 முதல் 19 வரை அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகளின் இருபுறமும் பஹ்ரைன் தேசியக் கொடிகள் மற்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் வீதிகள் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் பிரதமர் மற்றும் பட்டத்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...