13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தாய் கூலி வேலை செய்து…

மேலும்...

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

போபால் (19 செப் 2022): மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்றபோது, வருங்கால கணவர் முன் சிறுமி இரண்டு மைனர்கள் உட்பட 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், இரு குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இரு குடும்பத்தாரும் புகார் அளிக்க விரும்பவில்லை. இந்த…

மேலும்...

தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார். பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று…

மேலும்...

பில்கீஸ் பானு கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் பிராமணர்கள் – பாஜக எம் எல் ஏ!

புதுடெல்லி (18 ஆக 2022):பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களை விடுவிக்க காரணமாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சிகே ரவுல்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் . “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பிராமணர்கள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் நன்கு பண்பட்ட மனிதர்கள்.”என்றார் கடந்த…

மேலும்...

சிறுமி வன்புணர்வு – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

நொய்டா (29 ஏப் 2022): உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வியாழன் அன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங் தள அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் ஒரு காவல்துறை அதிகாரி காயம் அடைந்தார். 17 வயது சிறுமியை 13 வயது சிறுவன் வன்புணர்வு செய்த வழக்கு தொடர்பாக வலதுசாரி அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் சிறுவனும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. வன்புணர்வு செய்த சிறுவன் இந்து என்பதாக கூறப்படுகிறது….

மேலும்...

பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாருக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் போராட்டம்!

லக்னோ (11 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனிதாசுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் கைராபாத் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய…

மேலும்...

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல் – வீடியோ

லக்னோ (08 ஏப் 2022): உத்திர பிரதேசத்தில் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நவராத்திரி விழாவையொட்டி உத்திர பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது….

மேலும்...

பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அந்த சுடுகாட்டில்…

மேலும்...

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக தலைவர் கைது!

லக்னோ (26 ஜூன் 2021): உத்தரபிரதேசத்தில் இளம் பெணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லியாவில் உள்ள பாஜக தலைவர் 23 வயதான பிரிஜ் மோகன் பாண்டே, 23 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடை பட்டதாகவும் இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த…

மேலும்...

ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!

லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…

மேலும்...