ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…

மேலும்...

கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது பெருந் திகிலூட்டும் நிகழ்வாகவும் மாறியது. `அம்வாஸின் பிளேக்’ என்ற பெயரில் வரலாற்றில் வெகு அழுத்தமாகப் பதிவாகும் அளவுக்குப் பிரமாண்டமாய் உருமாறியது அந்நோய். இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தை அறிந்தவர்களுக்கும் பல வாசகர்களுக்கும் உமர் என்ற பெயர் அறிமுகமாகியிருக்கும். முஸ்லிம்களுக்கும் நபி பெருமானாருக்கும் பெரும்…

மேலும்...

அப்பா வீடு – சிறுகதை!

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார். “அப்பா! நல்லாருக்கீங்களா?” என்று சிரித்தபடி நின்றிருந்தான் மகன். மருமகள் கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள். “தாத்தா” என்று ஓடிவந்தான் பேரன். மழைக்கான மேகம்கூட இன்றி வானத்தில் வெயில். “வாங்க” என்று பேரன் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று ஃபேனின் வேகத்தை அதிகப்படுத்தினார். மருமகள்…

மேலும்...

சாம்பிள்-9 – சிறுகதை

இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்றுகொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது. சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து, ஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது. பின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு?” என்றான். “அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய்…

மேலும்...